குமரியில் பைக் தகராறு: வாலிபரை தாக்கிய மூன்று பேருக்கு வலை

குமரியில் பைக் தகராறு: வாலிபரை தாக்கிய மூன்று பேருக்கு வலை
பைல் படம்
குமரியில் பைக் தகராறில் வாலிபரை தாக்கிய மூன்று பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடி பகுதி சேர்ந்தவர் அனீஸ் (20 ).இவர் கடலில் மீன் பிடித்தொழில் செய்து வந்தார். இவரிடம் கன்னியாகுமரி சின்னமூட்டம் பகுதி சேர்ந்த டிகாப்ஷன் (23 )என்பவர் பைக் கேட்டுள்ளார். உடனே அனீஸ் தனது நண்பர் அஜின் என்பவரிடமிருந்து பைக்கை வாங்கி டிகாப்ஷனுக்கு கொடுத்துள்ளார்.

சம்பவத்தன்று பைக்கை கேட்ட அனிஷை 3 பேர் கும்பல் தாக்கியுள்ளனர். இதில் அனீஸ் காயமடைந்தார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது. இது குறித்து அனீஸ் கோட்டாறு போலீசில் புகார் செய்தார். போலீஸர் வழக்கு செய்து மூன்று பேரை தேடி வருகிறார்கள்.

Tags

Next Story