கரூர் அருகே பைக் கட்டுப்பாட்டு இழந்து விபத்து: வாலிபர் உயிரிழப்பு

கரூர் அருகே பைக் கட்டுப்பாட்டு இழந்து விபத்து: வாலிபர் உயிரிழப்பு

காவல் நிலையம்

கரூர் அருகே பைக் கட்டுப்பாட்டு இழந்து விபத்துக்குள்ளனதில் வாலிபர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி ஷாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் பழனிசாமி வயது 38. இவர் மே 6 ஆம் தேதி மதியம் 2:15 மணி அளவில், பங்காருபாடி - சொக்கலாபுரம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள பழனிச்சாமி தோட்டம் அருகே வேகமாக சென்றதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார்த்திக் பழனிசாமிக்கு தலை, வலது கை, இடது கால் தொடை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்திக் பழனிசாமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த கார்த்திக் பழனிச்சாமியின் மனைவி தேவி வயது 35 என்பவர், இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர்,

உயிரிழந்த கார்த்திக் பழனிச்சாமியின் உடலை அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

Tags

Next Story