கரூர் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: முதியவர் படுகாயம்

கரூர் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: முதியவர் படுகாயம்

காவல் நிலையம் 

கரூர் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, மணவாசி அருகே உள்ள கே.பி குளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் வயது 80. இவர் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில், அவருக்கு சொந்தமான எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் திருச்சி- கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

இவரது வாகனம் மணவாசி பிரிவு அருகே சென்ற போது, அதே சாலையில் பின்னால் வந்த திருவாரூர் மாவட்டம் திருக்கருக்காவூர் அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம், பழனியப்பன் ஓட்டிச் சென்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கீழே விழுந்த முதியவர் பழனியப்பனுக்கு, வலது கை மணிக்கட்டு, இடது முழங்கை ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள நாச்சிமுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த பழனியப்பனின் மகன் மகேஷ் வயது 52 என்பவர், அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சரக்கு வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ரமேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags

Next Story