கரூர் அருகே பைக்குகள் மோதல்: முதியவர் படுகாயம்

கரூர் அருகே பைக்குகள் மோதல்: முதியவர் படுகாயம்

காவல் நிலையம்

கரூர் அருகே பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார்.
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, ஆதனூர், கீழமேட்டு பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகுமலை வயது 65. இவர் பிப்ரவரி 16ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் கரூர்- திண்டுக்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் வெள்ளியணை அருகே உள்ள எஸ்.கே.பி.திருமண மஹால் அருகே சென்று கொண்டிருந்தபோது, கரூர் அருகே உள்ள பெரிய குளத்து பாளையம், மியாமின் நகர் பகுதியைச் சேர்ந்த, இர்ஃபான் மகன் சையது அலி வயது 28 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், அழகுமலை ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் டூவீலருடன் கீழே விழுந்த அழகுமலைக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, அழகுமலையின் மகன் ஈஸ்வரமூர்த்தி வயது 28 என்பவர், இது குறித்து வெள்ளியணை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய சையதுஅலி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியனை காவல்துறையினர்.

Tags

Next Story