பைக்குகள் நேருக்கு நேர் மோதல் - வியாபாரி உயிரிழப்பு

பைக்குகள் நேருக்கு நேர்  மோதல் -  வியாபாரி உயிரிழப்பு
பைல் படம்
நாகர்கோவிலில் இருசக்கர வாகனங்ககள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நாகர்கோவில் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன் (42) இவர் அந்த பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்தி வருகிறார். இவரை சந்திக்க மதுரை வளையல்கார தெருவை சேர்ந்த ராமஜெயகிருஷ்ணன் என்பவர் வந்தார். பின்னர் இருவரும் ஒரே பைக்கில் வைத்தியநாதபுரம் பெருமாள் கோயில் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் திடீரென இவர்கள் பைக்கின் மீது மோதியது.

இதில் கிருபாகரன் மற்றும் ராம ஜெயகிருஷ்ணன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த ராம ஜெயகிருஷ்ணன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். கிருபாகரன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராம ஜெயகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story