நாகம்மன் கோவிலில் பிரமோற்சவம்

நாகம்மன் கோவிலில் பிரமோற்சவம்

  விக்கிரவாண்டி அருகே நாகம்மன் கோவிலில் நடந்த பிரமோற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

விக்கிரவாண்டி அருகே நாகம்மன் கோவிலில் நடந்த பிரமோற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூர் நாகம்மன் கோவிலில் சித்திரை மாத பிரமோற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சக்திகரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பக்தர் கள் பால்குடம் மற்றும் தீச்சட்டி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து நாகம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இரவு சாமி வீதிஉலா நடைபெற்றது. இதற்கான ஏற் பாடுகளை கோவில் தர்மகர்த்தா நாகராஜன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story