செம்பரம்பாக்கம் ஏரியில் குவியும் பறவைகள்

செம்பரம்பாக்கம் ஏரியில் குவியும் பறவைகள்

செம்பரம்பாக்கம் ஏரியில் குவியும் பறவைகள்

செம்பரம்பாக்கம் ஏரிக்கு உணவு தேடி ஏராளமான பறவைகள் படை எடுத்துவரும் நிலையில், கூடுகளை கட்டி, மரங்களை நடவு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு உணவு தேடி ஏராளமான பறவைகள் படை எடுத்துவரும் நிலையில், ஏரியின் மேற்புற பகுதியில் பறவைகள் கூடு கட்டி தங்க ஏதுவாக, மரங்களை நடவு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் 6,300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் மேற்புற பகுதி பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம், பழஞ்சூர், பாப்பான்சத்திரம், மேவளூர்குப்பம், தண்டலம், கீவளூர், காட்டரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த பகுதியில் உணவு தேடி, ஏராளமான பறவைகள் வருகின்றன.

செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டு முழுதும் தண்ணீர் நிரம்பி உள்ளதால், பறவைகளின் புகலிடமாக மாறி வருகிறது. எனவே, இங்கு பறவைகள் தங்கி, கூண்டு கட்டுவதற்கு ஏதுவான மர வகைகளை நடவு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story