சுதந்திர போராட்ட வீரர் வேலுத்தம்பி தளவாய் பிறந்த தின விழா

சுதந்திர போராட்ட வீரர் வேலுத்தம்பி தளவாய் பிறந்த தின விழா

நாகர்கோவிலில் சுதந்திர போராட்ட வீரர் வேலுத்தம்பி தளவாய் பிறந்த தின விழா நடந்தது.


நாகர்கோவிலில் சுதந்திர போராட்ட வீரர் வேலுத்தம்பி தளவாய் பிறந்த தின விழா நடந்தது.

சர்வதேச வேளாளர் சங்கம், அகில பாரத சனாதன பேரவை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வெள்ளாளர் பேரவை சார்பாக சுதந்திர போராட்ட வீரர் வேலுதம்பி தளவாய் பிறந்தநாள் தின விழா மற்றும் முற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி விழா நடைபெற்றது. நாகர்கோவில் பெருமாள் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்ட வெள்ளாளர் பேரவை மாவட்ட பொதுச்செயலாளர் சந்துரு தலைமை வகித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச வேளாளர் சங்க நிறுவன தலைவரும், Life Line மருத்துவ குழுமத்தின் நிர்வாக இயக்குனரும், மருத்துவர் ராஜ்குமார் , தினமலர் நாளிதழின் நிர்வாக இயக்குனர் V.V.R.சுப்பிரமணியன் (எ) தினேஷ், PRS மருத்துவ குழுமத்தின் நிர்வாக இயக்குனர் முருகன் மற்றும் மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் பழனி கணபதி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் கன்னியாகுமரி மாவட்ட மீன் விவசாயிகள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க மாவட்ட சேர்மனும், தமிழக பா.ஜ.க மீனவர் பிரிவு மாநில செயலாளர் & பெருங்கோட்ட பொறுப்பாளருமான E.S.சகாயம் என்பவரின் சமூக சேவையினை பாராட்டி விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்வில் அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story