எருமபட்டி அமமுக கிழக்கு சார்பில் எம்ஜிஆர்க்கு பிறந்தநாள் விழா

எருமபட்டி அமமுக கிழக்கு சார்பில் எம்ஜிஆர்க்கு பிறந்தநாள் விழா

எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாட்டம் 

எருமபட்டி அமமுக கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் எம்ஜிஆர்க்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், ஆணைக்கிணங்க அனைத்து பகுதிகளிலும் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நாமக்கல் வடக்கு மாவட்டம் எருமப்பட்டி கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் எம். சிவகுமார், தலைமையில் செவ்வந்தி பட்டி ஊராட்சி, வரகூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர்107 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதிய கொடிகள் தோரணங்கள் கட்டி புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பட்டாசுகள் வெடித்து புதிய கொடிக்கம்பத்தில் கொடிகள் ஏற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இனிப்புகள் சேலைகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107 ஆவது பிறந்தநாள் விழா வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஏ.பி.பழனிவேல், முன்னிலை வகித்தார். நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பாக உற்சாகமாக கொண்டாடினர். தொடர்ந்து அவரது புகழை கோஷங்களாக எழுப்பினர்.

இந்த பிறந்தநாள் விழாவில் மாவட்ட அவைத் தலைவர் எஸ். பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் எஸ். அன்புச்செழியன், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் கா.முருகன், அம்பிகா, பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் முருகேசன், ரவிச்சந்திரன், ஜெயச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவா, ரித்தீஷ், ஒன்றிய கழக பொறுப்பாளர் ,பேரூர் கழகச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள் வார்டு கழகச் செயலாளர்கள், மகளிர் அணியினர், மற்றும் சார்பு மன்ற நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story