பேராவூரணியில் தி.கழக தலைவர் கி.வீரமணி பிறந்தநாள் விழா 

பேராவூரணியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 91 ஆவது பிறந்த நாள் சுயமரியாதை நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சனிக்கிழமை காலை ஆவணம்சாலை முக்கத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் வை. சிதம்பரம் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அரு. நல்லதம்பி முன்னிலை வகித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், தெற்கு மாவட்ட அவை தலைவர் சுப.சேகர், திமுக நகரப் பொருளாளர் ஏ.ராமநாதன், அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ஷாஜகான், இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் அ.ஆனந்தராஜ்,

திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் மாவட்டச் செயலர் அனல் ரவீந்திரன், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், மாவட்ட அமைப்பாளர் சோம. நீலகண்டன், ஒன்றியத் தலைவர் தமிழ்ச்செல்வன், நகரச் செயலாளர் சந்திரமோகன், ஒன்றிய இளைஞரணி தலைவர் வசி, ஒன்றிய இளைஞரணி செயலாளர சந்தோஷ் குமார், விடுதலை வாசகர் வட்ட பொருளாளர் திருப்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story