சிறுமியை கடத்திய பிரியாணி கடைக்காரர் கைது

சிறுமியை கடத்திய பிரியாணி கடைக்காரர் கைது

சிறுமியை கடத்தியவர் கைது

சிறுமியை கடத்திய பிரியாணி கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி ஆரணியில் பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வருகிறார். ஆரணி அடுத்த பையூரை சேர்ந்தவர் சரண்(20). பிரியாணிகடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அடிக்கடி சிறுமி பிரியாணி சாப்பிட வந்துள்ளார். அப்போது சரண் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காதல் வலை வீசியுள்ளார்.கடந்த 29-ந் தேதி வழக்கம்போல் வேலைக்கு சிறுமி சென்றார். வேலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம், பக்கம் என பல இடங்களில் தேடி உள்ளனர். அவர் கிடைக்காததால் இதுகுறித்து சிறுமியின் பெற் றோர் பெரணமல்லூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் சரண் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது சிறுமியை சரண் கடத்தி வீட்டில் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரணை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story