வினோத போட்டி: எந்த ஜோடி வெற்றி?

நடுப்பட்டியில் பொங்கலை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடந்தன. அதில், கணவன் நீண்ட நேரத்துக்கு மனைவியை தூக்கி வைத்திருக்கும் வினோத போட்டி பலரையும் கவர்ந்தது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கணவன், மனைவியை அதிக நேரமாக தூக்கி வைத்திருக்கும் வினோத போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 12 ஜோடிகள் கலந்து கொண்டனர். இளம் கணவன், மனைவிகள் மகிழ்ச்சியாக இந்த போட்டியில் கலந்து கொண்டனர். நேரமாக ஆக கணவன்மார்களுக்கு வேர்த்து கொட்டியதை மனைவிகள் துடைத்துவிட்டு அவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். போட்டி ஆரம்பித்து ஒரு மணி நேரமாக கடைசிவரை தனது மனைவியை கைவிடாமல் வைத்திருந்த கார்த்தி சௌடீஸ்வரி தம்பதியினர் வெற்றி பெற்றனர்.

Tags

Next Story