மக்களுக்கு நல்லதை செய்வேன் அரசியலுக்கு வந்தேன் பாஜக வேட்பாளர் பிரச்சாரம்

மக்களுக்கு நல்லதை செய்வேன் அரசியலுக்கு வந்தேன் பாஜக வேட்பாளர் பிரச்சாரம்

வாக்கு சேகரிப்பு 

கரூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் விராலிமலை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

விராலிமலை கரூர் லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் விராலிமலை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கல்குடி, ராஜாளிப்பட்டி, மீனவேலி, தென்னம்பாடி, விராலூர், விராலிமலை உள்பட 16 ஊராட்சிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்,

நான் கோடி கோடியாக சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் பொது வாழ்க்கைக்கு வந்துள்ளேன். நீங்கள் ஒரு முறை எனக்கு வாய்ப்பு தாருங்கள் பிரதமர் நரேந்திர மோடியை நம்புங்கள் தமிழகத்தில் இப்போது பள்ளி படிக்கின்ற குழந்தைகள் போதைக்கு அடிமையாகி இருக்கின்றனர். டாஸ்மாக் 24 மணி நேரமும் இயங்குகிறது. தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் அடிப்படை தேவையான குடிநீர், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் கண்டிப்பாக நாட்டுக்கு தேவை இதையெல்லாம் பெற வேண்டும் என்றால் தாமரை சின்னத்துக்கு ஓட்டளிக்க வேண்டும் மீண்டும் மோடி பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்றார்.

வேட்பாளருடன் மாநில மகளிர் அணி துணைத்தலைவர் மீனா, மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார், மாவட்ட பொது செயலாளர் வக்கீல் சண்முகசுந்தரம், மாநில பொதுக்குழு உறுப்பினர் கென்னடி ஒன்றிய தலைவர் சுந்தரம் மற்றும் கூட்டணி கட்சியினர் சென்றனர்.

Tags

Next Story