பாஜக வேட்பாளர், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் பிரச்சாரம்

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வாளிகண்டபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரயில் போக்குவரத்துக் கொண்டுவர மீண்டும் என்னை டெல்லிக்கு அனுப்புங்கள்,பாஜக வேட்பாளர், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் பிரச்சாரத்தின் போது தகவல். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இதனை தொடர்ந்து ஏப்ரல் 1ஆம் தேதி இரவு 8 மணி அளவில் பெரம்பலூர் அருகே வாளிகண்டபுரம் பகுதியில், பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாரிவேந்தர் பேசுகையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரயில் போக்குவரத்துக் கொண்டு வருவதற்கு தன்னை மீண்டும் டெல்லிக்கு அனுப்பினால் மட்டுமே செய்ய முடியும் என்றும் மேலும் சொந்த செலவில் 6 சட்டமன்ற தொகுதியிலும் உள்ள ஏழை குடும்பங்கள் 1500 பேருக்கு 10 லட்சம் மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story