பர்கூரில் பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.

பர்கூரில் பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.

வாக்கு சேகரிப்பு


கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் பர்கூரில் பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் பாஜக சார்பில் நரசிம்மன் என்பவர் போட்டிட்டு வருகிறார் பர்கூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சின்னமட்டாரப்பள்ளி குருவி நாயனபள்ளி, மற்றும் அதைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் பேசும் போது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியா பல்வேறு சோதனைகளை மட்டுமே சந்தித்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், இந்தியாவை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் பிரதமர் மோடி முன்னேற்றி காட்டியுள்ளார். மத்தியில் ஊழல் செய்யாத அரசாக பாஜக அரசு விளங்குகிறது. மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் அதற்கு. நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்து, என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் மேலும் கிருஷ்ணகிரி வழியாக ரயில் போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்றுவேன் என்றார். அப்போது, கிருஷ்ணகிரி பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் சிவபிரகாஷ் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Tags

Next Story