சிவகாசி பங்குனி பொங்கல் விழாவில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் சுவாமி தரிசனம்...

சிவகாசி மாரியம்மன் கோவிலில் நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சுவாமி தரிசனம்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்,இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் நடிகை ராதிகா, தனது கணவர் நடிகர் சரத்குமாருடன், மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் நடிகர் சரத்குமாருக்கும், நடிகை ராதிகாவிற்கும் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.சுவாமி தரிசனம் செய்த இருவருக்கும் கோவில் நிர்வாகிகள் பிரசாதங்கள் வழங்கினர். கோவிலுக்கு வந்திருந்த நடிகை ராதிகாவையும், நடிகர் சரத்குமாரையும் பொதுமக்கள் ஆர்வமாக சந்தித்து, அவர்களுடன் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story