வாக்காளர்களின் நேரடி ஆலோசனைகளை சேகரித்த பாஜகவினர்

வாக்காளர்களின் நேரடி ஆலோசனைகளை சேகரித்த பாஜகவினர்

ஆலோசனை பெட்டி

ஊத்தங்கரையில் பாஜக சார்பில் பெட்டி வைக்கப்பட்டு பொதுமக்களின் ஆலோசனைகள் பெறப்படுகிறது.
ஊத்தங்கரை பாஜக கட்சியின் சார்பில் பாஜக விற்கு வாய்ப்பு கேட்டு மக்களை அணுகும் வகையில் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு உங்கள் பேனாவின் மூலம் எங்களுக்கு ஆலோசனை வழங்குங்கள் என்றும் வளர்ச்சியடைந்த பாரதம் மோடியின் உத்தரவாதம் என்றும் மீண்டும் ஒருமுறை மோடி அரசு என்றும் அச்சிடப்பட்ட தாள் மக்களிடம் கொடுத்து அவர்களுடைய கருத்துக்களை கொண்டு வந்த பெட்டியில் போட கட்சியினர் வேண்டுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் ஜுவல்லரி சிவா, பாவக்கல் சிவக்குமார், சத்தியமூர்த்தி, குமார் சிங், சாந்தி டைலர் வேலு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story