எஸ்.ஐ.யை தாக்கிய பாஜக கவுன்சிலர் உட்பட 3 பேர் கைது.

எஸ்.ஐ.யை தாக்கிய பாஜக கவுன்சிலர் உட்பட 3 பேர் கைது.

பாஜக கவுன்சிலர் கைது

மார்த்தாண்டத்தில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதை தட்டி கேட்ட உதவி ஆய்வாளரை தாக்கிய பாஜக கவுன்சிலர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா தலைமையில் இரவு போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். பம்மம் மேம்பாலம் பகுதியில் போலீசார் வந்த போது, நாகர்கோவில் மாநகராட்சி 12 வது வார்டு பாஜக கவுன்சிலர் சுனில்குமார் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

சுரேஷ், சிவ சிதம்பரம், தோவாளையை சேர்ந்த கார் டிரைவர் விஸ்வா ஆகியோர் அந்த வழியாக வந்த டாரஸ் லாரிகள் மற்றும் வாகனங்களை சிறை பிடித்து தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா, எஸ்.ஐ. பெனடிட் மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று தகராறு செய்தவர்களை விலக்கி, போக்குவரத்துக்கு இடையூறு செய்யாதீர்கள் என ன கூறி அங்கிருந்து செல்லமாறு கூறியுள்ளனர்.

அப்போது சுனில் குமார் திடீரென எஸ்.ஐ. பெனடிட் சீருடையை பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவதூறாகவும் பேசினார். மற்றவர்களும் சேர்ந்து எஸ்.ஐ. பெனடிட்டை மிரட்டி இருக்கிறார்கள். இது குறித்து உதவி ஆய்வாளர் பெனடிட் அளித்த புகாரின் பேரில், 4 பேர் மீதும் இந்திய தண் டனை சட்டப்பிரிவு 294 (பி), 341, 353, 323, 332, 506 (ii) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சுனில்குமார், சுரேஷ், சிவ சிதம்பரம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story