யானை தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தினருக்கு பாஜக நிர்வாகி ஆறுதல்

யானை தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தினருக்கு பாஜக நிர்வாகி ஆறுதல்

ஆறுதல் தெரிவித்த பாஜக நிர்வாகி நந்தினி 

கோதையாறு வனப்பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் குடும்பத்தினரை சந்தித்து பாஜக நிர்வாகி ஆறுதல் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மயிலாறு பகுதியில் காட்டு யானை தாக்கி பலியான அரசு ரப்பர் தோட்ட தொழிலாளி மணிகண்டன் இறந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நந்தினி அங்கு சென்று மணிகண்டனின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.மேலும் உயிரிழந்த இந்த ரப்பர் தோட்ட தொழிலாளி குடும்பத்திற்கு 25-லட்சம் வழங்க வேண்டுமெனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அரசு ரப்பர்கழகம் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தார்.

Tags

Next Story