பாஜக நிர்வாகி சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல்

பாஜக நிர்வாகி சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல்

வேட்புமனு தாக்கல் 

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் டெல்லி பாஜக மோடி அணி சார்பாக ( சுயேட்சையாக) போட்டியிட பாஜகவின் மதுரை மேற்கு மாவட்ட விவசாய அணி செயற்குழு உறுப்பினரும் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்த வேதா தாமோதரன் என்பவர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பிரதமர் நரேந்திர மோடி தனக்கு வாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்து இருப்பதாக பேட்டி அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் என்பதால் மக்களவைத் தேர்தலில் போட்டிடுவதற்காக டெல்லி பாஜக மோடி அணி சார்பில் பாஜகவின் மதுரை மேற்கு மாவட்ட விவசாய அணி செயற்குழு உறுப்பினரும் டெல்லி பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிந்த வேதா தாமோதரன் தேர்தல் அலுவலர் ஜெயசீலனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் எதிர்த்து அக்கட்சி நிர்வாகி ஒருவரே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது அக்கட்சி தலைமை மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வேட்பு மனு தாக்கல் செய்த தாமோதரன் விருதுநகர் தொகுதி எனக்குத்தான் தருவதாக கட்சித் தலைமை அறிவித்தது. ஆனால் வேறொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து டெல்லி பாஜக மோடி அணி சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

Tags

Next Story