பாஜக விவசாய அணியினா் தென்காசியில் ஆா்ப்பாட்டம்

பாஜக விவசாய அணியினா் தென்காசியில் ஆா்ப்பாட்டம்

பாஜக விவசாய அணியினர் தென்காசியில் ஆர்ப்பாட்டம்

தேங்காய் எண்ணெய்யை ரேஷன்கடைகளில் விற்பனை செய்ய கோரி பாஜக விவசாய அணியினா் தென்காசியில் ஆா்ப்பாட்டட்த்தில் ஈடுப்பட்டனர்
தென்காசியில் தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடையில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தென்காசியில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட பாஜக விவசாய அணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு விவசாய அணி மாவட்ட பொதுச் செயலா் விஜய் சேகா் தலைமை வகித்தாா். மாவட்ட விவசாய அணிச் செயலா்கள் ராகவன், அரிரங்கநாதன்,காளிராஜ் முன்னிலை வகித்தனா். மாவட்ட பாஜக பொதுசெயலா்கள் பாலகுருநாதன், அருள்செல்வன் கண்டன உரையாற்றினா். மாவட்ட பொதுச் செயலா் ராமநாதன், மாவட்டதுணைத் தலைவா் முத்துக்குமாா் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story