ராமரை இழிவுபடுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் காவல்நிலையத்தில் புகார்

திருச்சி தி.மு.க மாநகர மகளிர் தொண்டரணி அமைப்பாளர் முகநூல் பக்கத்தில் சர்சைக்குரிய கருத்தை பதிவிட்டதாக புகார்
திருச்சி மாவட்டம், மணப்பாறை வடக்கு ஒன்றிய பாஜக மண்டல தலைவர் சதீஷ் குமார் என்பவர் மணப்பாறை போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை மூடி இருக்கும் என்ற அறிவிப்பை வைத்து திருச்சி தி.மு.க மாநகர மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ரம்யா பேகம் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் சர்சைக்குரிய கருத்தை பதிவிட்டு உள்ளார். மத உணர்வை தூண்டி மன உழைச்சலுக்கு ஆளாக்கிய சம்மந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அந்த மனுவில் கூறி உள்ளார்.

Tags

Next Story