சங்கரன்கோவிலில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்!!

சங்கரன்கோவிலில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்!!
சங்கரன்கோவிலில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்
தேர்தலுக்கான கட்சி அலுவலத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திறந்து வைத்தார். அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்த பாஜகவினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி பாராளுமன்ற தேர்தலுக்கான கட்சி அலுவலத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து பயணியர் விடுதி முன்பு என் மண், என் மக்கள் யாத்திரையை பல்லாயிரகணக்கான தொண்டர்களுடன் நடந்து சென்றனர். இதில் பத்து அடி உயரமுள்ள ராட்ச மாலையை கிரேன் மூலம் பாஜகவினர் அண்ணாமலைக்கு அணிவித்தனர். யாத்திரை நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, அமர்பிராசத் ரெட்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பல்லாயிரகணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டு அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story