பாஜ.,ஆட்சி நிச்சயமாக மாறும் -கனிமொழி

பாஜ.,ஆட்சி நிச்சயமாக மாறும் -கனிமொழி
நாகர்கோவிலில் கனிமொழி எம்.பி பேச்சு
பாஜ., ஆட்சி நிச்சயமாக மாறும் என திமுக., எம்.பி., கனிமொழி கூறினார்.

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடந்த திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு முகாமில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி பேசியதாவது:- திமுக தேர்தல் அறிக்கை குழு சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கக்கூடிய பல துறைகளைச் சார்த்து இருக்க கூடிய, சங்கங்களை சார்ந்த அத்தனை பேரும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தேர்தல் அறிக்கை என்பது நம்முடைய உரிமைகளை மீட்பதற்கான ஒரு தேர்தல் அறிக்கை. ஒன்றியத்தில் இருக்கக்கூடிய அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாநில உரிமைகளைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது.

அதனால் இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டு மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகளை அதற்கான தீர்வுகளை காண நம்முடைய முதலமைச்சர் கட்டளைதான் இந்த தேர்தல் குழு. ஒன்றிய ஆட்சி நிச்சயமாக மாறும் என்ற நம்பிக்கையோடு நாம் அந்த ஆட்சி மாற்றத்திற்கான உழைப்பை முதலில் செய்து கொண்டிருக்கிறோம். அந்த ஆட்சி மாற்றம் வந்த பிறகு நம்முடைய உரிமைகளை மீட்பதற்காக நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அதையும் நீங்கள் எங்களிடம் வழங்க வேண்டும். என பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் ரெ.மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story