கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு

கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு

 கொங்கு மண்டலத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அதன் மாநில செயலாளர் மலர்கொடி கூறினார். 

கொங்கு மண்டலத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அதன் மாநில செயலாளர் மலர்கொடி கூறினார்.

ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்தில் மாநில செயலாளர் மலர்கொடி செய்தியாளர் சந்தித்தார்.அப்போது , காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எதையும் மூடி மறைத்து தான் பேச்சுவார்கள் என்றும் , மகராஷ்டிராவில் ராகுல்காந்தி ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமின்றி சொத்து கணக்கெடுப்பு நடத்துவோம் என தெரிவித்தார் என்றும் பிரதமர் மோடி காங்கிரஸ் என்ன செய்வார்கள் என்று தான் தெரிவித்தார் என மாநில செயலாளர் மலர்கொடி தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மோடி எந்த இடத்திலும் குறிப்பிட்ட சமுதாயத்தையே அல்லது குறிப்பிட்ட மதத்தையே குறிப்பிட்டு பேசவில்லை என்றும் பாரத தேசத்தை பிரித்து ஆள வேண்டும் என்ற ராகுல்காந்தியின் எண்ணத்தை பொதுமக்களின் கருத்தாக மோடி தெரிவித்துள்ளார் என்றார் கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்த மலர்கொடி ஏழை மாணவர்களும் நீட் தேர்வால் மருத்துவராகி வருவதால் நீட் மாணவர்களுக்கு கிடைத்த வர பிரசாதம் என்றார். இந்த சந்திப்பின் போது மாவட்டத்தலைவர் வி. சி வேதானந்தம் மற்றும் பாராளுமன்ற பொறுப்பாளர் N.P பழனிசாமி ஆகியோர் உடனிருந்தனர்

Tags

Next Story