கூடுதல் ரயில்கள்: பாஜகவினர் கோரிக்கை

கூடுதல் ரயில்கள்: பாஜகவினர் கோரிக்கை
செங்கோட்டையிலிருந்து கூடுதல் ரயில்கள்: பாஜகவினர் கோரிக்கை
செங்கோட்டையிலிருந்து கூடுதல் ரயில்கள் இயக்க பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என, பாஜக நிா்வாகிகள் கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக சென்னையில் தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் கௌசல் கிஷோரிடம் தமிழக பாஜக மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் மருதுபாண்டியன், தொழில் பிரிவு மாநிலச் செயலா் அருணாச்சலம் ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

செங்கோட்டையில் பிட் லைன், தென்காசி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்களுக்கு நீரேற்றும் வசதி ஏற்படுத்த வேண்டும். செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு இரவு நேர ரயில்கள் அதிகமில்லாததால், பொதிகை விரைவு தினசரி ரயிலை இரவு 7.30-க்கு மேல் செங்கோட்டையிலிருந்து இயக்க வேண்டும்.

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாகவும், திருநெல்வேலி - செங்கோட்டை , செங்கோட்டை - விருதுநகா் ரயில் பாதையை இருவழி அகலப் பாதையாக மாற்ற வேண்டும். தென்காசி, கடையநல்லூா், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் வழியாக கூடுதல் ரயில் சேவை வழங்க வேண்டும். இதன்மூலம் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பதுடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றனா் அவா்கள்.

Tags

Next Story