கள்ளக்குறிச்சிக்கு இன்று பா.ஜ., தலைவர் வருகை

கள்ளக்குறிச்சிக்கு இன்று பா.ஜ., தலைவர் வருகை

கள்ளக்குறிச்சிக்கு இன்று பா.ஜ., தலைவர் வருகை

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் பா.ஜ., மாநிலத் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்ய அறிக்கை.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் பா.ஜ., மாநிலத் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் அணி மாநில பொருளாளர், வேலுார் பெருங்கோட்ட பொறுப்பாளர் ஸ்ரீசந்த் ஜெயின் அறிக்கை: தமிழக பா.ஜ., சார்பில் இன்று காலை 10:00 மணிக்கு சங்கராபுரம் சட்டசபை தொகுதிக்கும்; மாலை 4:00 மணிக்கு ரிஷிவந்தியம் தொகுதிக்கும் 'என் மண்; என் மக்கள்' யாத்திரைக்காக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். மாலை 6:00 மணிக்கு கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியிலும் பாதயாத்திரை மேற்கொள்ளும் அவர் தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார். மாவட்டத்திற்கு வருகை தரும் அண்ணமாலைக்கு, கள்ளக்குறிச்சியில் மாவட்ட பா.ஜ., சிறுபான்மையினர் அணி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். எனவே, மாவட்ட தலைவர் தேவசந்திரகுமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் லுார்துராஜ், மகிமைராஜ், டேவிட்செல்வராஜ், மாவட்ட செயலாளர் நேரு உள்ளிட்ட அணியின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று, யாத்திரை வெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story