கட்டிட வாடகை தராததால் பொருட்களை விற்ற பாஜக நிர்வாகி கைது!

கட்டிட வாடகை தராததால் பொருட்களை விற்ற பாஜக நிர்வாகி கைது!

திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் கட்டிட வாடகை தராததால் பொருட்களை விற்ற பாஜக நிர்வாகியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் கட்டிட வாடகை தராததால் பொருட்களை விற்ற பாஜக நிர்வாகியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் சோளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி ( 35 ), இவர் வளையங்காடு பகுதியைச் சேர்ந்த பாஜக ஐடி விங்க் நிர்வாகி முருகேசன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பனியன் கம்பெனி வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். ஒரு மாத காலமாக பனியன் கம்பெனிக்கு ஆர்டர் இல்லாததால் கம்பெனியை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனால் ஒரு மாத வாடகையை சுந்தரமூர்த்தி முருகேசனுக்கு கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் சுந்தரமூர்த்தியின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் கம்பெனியின் பூட்டை உடைத்து 5 லட்சம் மதிப்புள்ள 30 தையல் இயந்திரங்களை எடுத்து விற்பனை செய்துள்ளார். இது குறித்து சுந்தரமூர்த்தி வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாஜகவை சேர்ந்த முருகேசனை நேற்று கைது செய்தனர்.

Tags

Next Story