பாஜக மேலாண்மை குழு பயிலரங்க நிகழ்ச்சி

பாஜக மேலாண்மை குழு பயிலரங்க நிகழ்ச்சி
பாஜக மேலாண்மை குழு பயிலரங்கம் 
காட்டாங்கொளத்தூரில் மக்களவை தேர்தல் குறித்த பாஜக மேலாண்மை குழுவினருக்கான பயிலரங்கம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியில் இயங்கி வரும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2024 குறித்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மேலாண்மை குழுவினருக்கான பயிலரங்கம் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹெச். ராஜா , முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: திமுக 5 முறை ஆட்சி செய்துள்ளது. 5 மருத்துவக் கல்லூரிகள் மட்டும் இருந்தது. மோடி ஆட்சிக்கு வந்தபிறகு 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்துள்ளோம். முதல்வருக்கு 65 சதவீம் ஆதரவு இருந்தநிலையில் தற்போது 36 சதவீமாக குறைந்துள்ளது. பாஜகவை சேர்ந்த நாங்கள் செய்த நலத்திட்டங்களை சொல்லி மக்களை சந்திக்கிறோம். அவர்கள் சாதனையை சொல்லி வாக்கு கேட்பதை விட்டுவிட்டு, மத்திய அரசு நிதியை பகிர்ந்து தரவில்லை எனக் புதிதாக ஒன்றைக் கூறி வாக்கு கேட்க வந்து விட்டார்கள். என்றார்.

Tags

Next Story