திண்டுக்கல் அருகே பாஜகவினர் மறியல் போராட்டம்

திண்டுக்கல் அருகே பாஜகவினர் மறியல் போராட்டம்

திண்டுக்கல் அருகே பாஜக நிர்வாகிகள் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி பாஜகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திண்டுக்கல் அருகே பாஜக நிர்வாகிகள் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி பாஜகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பாஜக இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் அவர் மனைவி தற்கொலைக்கு காரணமாக இருந்த குற்றவாளிகள் மீது உரிய வழக்குப்பதிவு செய்யவில்லை.கைது செய்ய மறுக்கும் காவல்துறையை கண்டித்து அரசு மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்தும் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு பாஜகவினர் சாலை மறியல் செய்தனர்.

இவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். அவர்கள் தற்கொலை செய்தது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பாஜக நிர்வாகிகள் உடலை வாங்கிச் சென்றனர்.

Tags

Next Story