பா.ஜ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பா.ஜ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

முஞ்சிறையில் பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

முஞ்சிறையில் பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

குமரி மாவட்டம் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பைங்குளம், முஞ்சிறை, மெதுகும்மல், விளாத்துறை ஆகிய ஊராட்சிகளை பேரூராட்சிகளோடு இணைப்பதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , பேருராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த முஞ்சிறை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். கட்சியின் முஞ்சிறை கிழக்கு ஒன்றிய தலைவர் வழக்கறிஞர் குமார், மேற்கு ஒன்றிய தலைவர் விஜில்குமார் முன்னிலை வகித்தார்கள். சிறப்பு விருந்தினராக விவசாய அணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். மற்றும் ஊராட்சி தலைவர்கள் விஜயராணி, ஓமனா, சசிகுமார் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story