மக்கள் விரோத சட்டங்களை அதிமுக ஆதரவுடன் பாஜக நிறைவேற்றுகிறது

மக்கள் விரோத சட்டங்களை அதிமுக ஆதரவுடன் பாஜக நிறைவேற்றுகிறது

திருச்சி சிவா 

இந்தியாவில் மக்களுக்கு எதிராக பா.ஜ.க கொண்டுவரும் சட்டங்களை, பயந்து முதலில் ஆதரவு கொடுப்பவர்கள் அதிமுகவினர், எதிர்த்து குறல் கொடுப்பவர்கள் திமுகவினர், பாராளுமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுகவிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என திருச்சி சிவா தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கம் மற்றும் பாசிச பாஜகவினரின் மக்கள் விரத போக்கினை கண்டித்து பொதுக்கூட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது,

கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மேடையில் பேசியதாவது : இந்தியாவில் ஒன்றிய அரசால் மக்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் திட்டங்களுக்கு முதலில் முழு ஆதரவை தருவது அதிமுகவினர் தான் தற்போது தேர்தலுக்காக பாஜகவை விட்டு விலகி வந்துவிட்டதாக மக்களை ஏமாற்றி வருகின்றனர், நீட் தேர்வு - குடியுரிமைச் சட்டம் - நீதிமன்ற சட்ட பெயர்களை மாற்றுதல் உள்ளிட்ட அனைத்திற்கும் முழு ஆதரவு கொடுத்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் அதிமுக வினர்,

மக்கள் விரோத போக்கிற்கு எதிராக செயல்படும் அனைத்து திட்டங்கள் இருக்கும் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு குரல் கொடுப்பது திமுகவின் மட்டும் தான் மக்கள் அதனை தெரிந்து கொள்ள வேண்டும், இந்திய நாடு மதசார்பற்ற நாடு என்பதாகும் அதனை தற்பொழுது ஒன்றிய அரசு சீரழித்து பல்வேறு போராட்டத்திற்கு வழிவகை செய்து வருகிறது, இஸ்லாமியர்களை ஒடுக்கும் வகையில் அனைத்து சட்டங்களையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி வருகிறது, ஒன்றிய அரசு குடியுரிமைச் சட்டம், நீதிமன்றத்தில் வழக்குகளின் சட்டத்தை பெயரை மாற்றி வைத்தல்,என்.ஐ.ஏ தீவிரவாத சட்டம் உள்ளிட்ட சட்டங்களை கொண்டு சிறுபான்மை மக்களை எதிராக ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி வருகிறது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து, பொது மக்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் வரும் வருமானத்தை வைத்து வழங்கக்கூடிய சலுகைககள்- திட்டங்களை அழித்துவிட்டு,பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றதன் மூலம் பல்லாயிரம் கோடி வருமானத்தை ஒன்றிய அரசு பெற்றுக் கொண்டு, அதானியும்- அம்பானியும் செல்வந்தர்களாக வாழ்வதற்கு வழிவகை செய்து வருகிறது ஒன்றிய அரசு, வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணிக்கு வாக்களித்து மக்களுக்கு எதிராக செயல்படும் பாஜக அரசை மக்கள் தோற்கடித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என திருச்சி சிவா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Tags

Next Story