பாஜக சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பாஜக சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு பா.ஜ., சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு பா.ஜ., சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் இலக்கிய பிரிவின் சார்பாக தை திங்கள் 2 ஆம் நாள் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மேலும் தமிழர் திருநாளை ஒட்டி உத்தமசோழபுரத்தில் உள்ள தமிழ் மூதாட்டி அவ்வை பிராட்டியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தமிழ் இலக்கியப் பிரிவின் மாநில செயலாளர் நாக வீரப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, சேலம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை, சுற்றுச்சூழல் பிரிவின் மாநில தலைவர் திரு RP.கோபிநாத் கூட்டுறவு பிரிவின் மாநில தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியினரும் , தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story