பழனி முருகன் கோவிலில் அண்ணாமலை வழிபாடு

பழனி முருகன் கோவிலில் அண்ணாமலை வழிபாடு

 அண்ணாமலை வழிபாடு 

பழனி முருகன் கோவிலில் பாஜக தலைவர் அண்ணாமலை வழிபாடு மேற்கொண்டார்.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் இன்று பழனியில் வழிபாடு மேற்கொண்டுள்ளார் பாஜக மாநிலத் தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை.தமிழ்நாடு திரும்பிய அண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த 25ஆம் தேதி வருகை புரிந்து பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தனது குடும்பத்துடன் ஓய்வு எடுத்தார். கொடைக்கானலில் எந்தவொரு பாஜக நிர்வாகிகளையும் அண்ணாமலை சந்திக்கவில்லை.தொடர்ந்து, பழனி பாலதண்டாயுதபாணி கோவிலில் நேற்று தரிசனம் மேற்கொண்டார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்கு வந்த அண்ணாமலையை, பாஜக நிர்வாகிகள் வரவேற்று கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story