திமுக அரசை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கள்ளக்குறிச்சி கள்ளசாராய உயிரிழிப்பிற்கு காரணமான திமுக அரசை கண்டித்து தருமபுரியில் மாவட்ட பி.ஜே.பியினர் ஆர்பாட்டம் 150 க்கும் மேற்பட்டோர் கைது கடந்த வாரம் கள்ளக்குறிச்சி அருகே விஷ சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்ட வர்கள் உயிரிலந்த சம்பவம் தொடர்பாக கள்ளசாராயத்தை கட்டுப்படுத்தாத திமுக அரசை கண்டித்து தருமபுரி தொலைபேசி நிலையம் அருகே தருமபுரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் மாவட்ட பொதுச் செயலாளர் ஐஸ்வர்யம் முருகன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாரதீய ஜனதா கட்சியினர் திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினர் காவல்துறையினரால் 150 பேரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

Tags

Next Story