பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்

பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிக்கோயில் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

காஞ்சிக்கோயில் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பேரூராட்சியின் சார்பில் 35 லட்சம் ரூபாய் செலவில் சிறுவர் பூங்காவின் நடுவே மேல்நிலைத் நீர்த்தொட்டி கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன . மேல்நிலை நீர்த்தொட்டியை வேறு இடத்தில் அமைக்கக்கோரியும் , சிறுவர் பூங்காவை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வர வலியுறுத்திம் , மக்கள் வரிப்பணம் வீணாகுவதை கண்டித்தும் பெருந்துறை வடக்கு மண்டல பா.ஜ.க சார்பில் காஞ்சிக்கோயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஈரோடு வடக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடசிவசுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தலைவர் வேதானந்தம் , மண்டல தலைவர் ராயல் சரவணன் , உட்பட 100 க்கும் மேற்பட்ட பா.ஜ.க வினர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். காஞ்சிக்கோயில் பேரூராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எதிராக இருப்பதால் பா.ஜ.க சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என பா.ஜ.கவினர் தெரிவித்தனர்

Tags

Next Story