பாஜ.,வினர் சாலை மறியல் போராட்டம்

பாஜ.,வினர் சாலை மறியல் போராட்டம்

தேசிய கொடியை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரண்மனை வாசல் பகுதியில் பாஜ.,வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய கொடியை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரண்மனை வாசல் பகுதியில் பாஜ.,வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் கடந்தவாரம் மோடி, அமித்ஷாவை தவறாக சித்தரித்தும், தேசிய கொடியை அவமதித்தும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என தெரிவித்து பாஜக சார்பில் இன்று அரண்மனை வாசல் பகுதியில் கண்டன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அனைவரும் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்‌‌.

இந்நிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மாவட்ட தலைவர் மேப்பல் சத்தியநாதன், மாவட்ட துணைத்தலைவர் சுகனேஷ்வரி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சங்கரசுப்பிரமணியம், நாகராஜன். நகர தலைவர் உதயா உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story