பாஜக மாற்று வேட்பாளர் ஏமாற்றம் !

பாஜக மாற்று வேட்பாளர் ஏமாற்றம் !

பாஜக மாற்று வேட்பாளர்

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக புதன்கிழமை சென்ற பாஜக மாற்று வேட்பாளர் மனு கொடுக்க முடியாமல் திரும்பினார்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக புதன்கிழமை சென்ற பாஜக மாற்று வேட்பாளர் மனு கொடுக்க முடியாமல் திரும்பினார். தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் கருப்பு எம். முருகானந்தம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை பிற்பகல் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து, பாஜக தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் பி. ஜெய்சதீஷ் மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்வதற்காகச் சென்றார். ஆனால், வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தனியாக வங்கிக் கணக்கை ஜெய்சதீஷ் தொடங்காமல் இருந்தார். இதனால், தனி வங்கிக் கணக்கு தொடங்கி வருமாறு தேர்தல் அலுவலர்கள் கூறினர். இதையடுத்து, வங்கிக் கணக்கு தொடங்கிவிட்டு மீண்டும் ஆட்சியரகத்துக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்காகச் சென்றார். அப்போது, அவருக்கு வரிசை எண்ணுடன் கூடிய டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால், அந்த டோக்கன் எண்ணுக்கு தேர்தல் அலுவலர்கள் அழைப்பு விடுத்தபோது, காத்திருப்பு அறையில் அவர் இல்லை என்றும், அதன் பின்னர் அவர் வந்தபோது நேரம் கடந்துவிட்டது எனவும் கூறப்படுகிறது. இதனால், வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாமல் அவர் திரும்பினார்.

Tags

Read MoreRead Less
Next Story