ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

செங்கம் அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தெருக்களில் கருப்புக் கொடி கட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனா்

செங்கம் அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தெருக்களில் கருப்புக் கொடி கட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனா்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்செங்கம் துரிஞ்சாபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழைநீர் தேங்கி தெருக்களில் சேரும் சகதியுமாய் உள்ளதை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து தெருவில் பொது மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டு சிமெண்ட் சாலை அமைக்க ஆணை வழங்கியும், சிமெண்ட் சாலை அமைக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனா். மேலும் மழை பெய்யும் போது சேரும்சகதியும் உள்ள அவல நிலை ஏற்பட்டு வருவதைக் கண்டித்து தெருவில் கருப்பு கொடி கட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வந்த மேல்செங்கம் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின் போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story