கருப்பு கொடிகட்டி பொதுமக்கள் போராட்டம் !

கருப்பு கொடிகட்டி பொதுமக்கள் போராட்டம் !

போராட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கருப்பு கொடிகட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் ஆத்தூர் தொகுதியில் அடாவடி அடிப்படை வசதிகள் செய்து தர கேட்டால் மிரட்டுவதாக குற்றச்சாட்டு ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முன்னிலை கோட்டை ஊராட்சி பண்ணபட்டி கிராம மக்கள் ஊரில் கருப்புக் கொடி கட்டி நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்தனர். பொதுமக்கள் கூறியதாவது: பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகளை நாங்கள் கேட்டு போராடி வருகிறோம். அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம். எங்கள் கோரிக்கைகளை மக்கள் பிரதிநிதிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால் வரும் தேர்தலை நாங்கள் புறக்கணிக்க போவதாக முடிவு எடுத்துள்ளோம். எங்களுக்கு உறுதிமொழி அளித்தால் தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நாங்கள் முடிவெடுக்க முடியும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

Tags

Next Story