கருப்புக்கட்டுக்குள் அருள்பாலித்தார் தபால் ஆஞ்சநேயர்

கருப்புக்கட்டுக்குள் அருள்பாலித்தார் தபால் ஆஞ்சநேயர்

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சங்ககிரி தபால் ஆஞ்சநேயர் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். 

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சங்ககிரி தபால் ஆஞ்சநேயர் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ தபால் ஆஞ்சநேயருக்கு, அனுமன் ஜெயந்தி 6வது நாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி விழா 6வது நாளையொட்டி ஸ்ரீ தபால் ஆஞ்சநேயருக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளியுள்ள மண்டப வளாகம் மற்றும் சுவாமியை சுற்றிலும் கரும்பு காடு இருப்பது போல் அமைத்து வெட்டிவேர் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர்.


Tags

Next Story