திருமயத்தில் முற்றுகை போராட்டம்!

திருமயத்தில் முற்றுகை போராட்டம்!

 பொது பயன்பாட்டு நிலத்துக்கு போலி பட்டா பெற்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருமயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்.

பொது பயன்பாட்டு நிலத்துக்கு போலி பட்டா பெற்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருமயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்.

பொது பயன்பாட்டு நிலத்துக்கு போலி பட்டா பெற்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருமயம் வட்டாட்சியரகத்தை பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்.

திருமயம் அருகே உள்ள மேலூர் கிராமத்தில் மூன்று தலைமுறைகாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலத்துக்கு தனிநபர் ஒருவர் பட்டா பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. சம்பவத்தில் தவறாக பட்டா பெற்றவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளை கண்டித்தும் திருமயம் மாவட்ட ஆட்சியரகத்தை பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு மறியல் செய்யும் முயன்றனர்.

இதையடுத்து அங்கு வந்த கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் புளியரசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் உள்ள ஆவணங்களை கேட்டு பெற்றுக் கொண்ட வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதியை தொடர்ந்து போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.

Tags

Next Story