இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்

பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகையிடும் போராட்டம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டது.
பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகையிடும் போராட்டம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தையில் தீர்வு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றிய குழு இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் காவல்துறையை கண்டித்து முற்றுகையிடும் போராட்டம் அறிவித்திருந்தனர் இந்நிலையில் பாபநாசம் அண்ணா சிலை அருகில் பாபநாசம் ஒன்றிய செயலாளர் பொன்சேகர் தலைமையில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாரதி மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் ஏஐடிசி மாநில செயலாளர் தில்லைவனம் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் சாமு தர்மராஜன் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதற்காக கூடினார்கள் உடனே பாபநாசம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் அசோக் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணப்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் முற்றுகையிடும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இப் போராட்டத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்

Tags

Next Story