பாதாள சாக்கடையில் அடைப்பு: சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

பாதாள சாக்கடையில் அடைப்பு: சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

பெரிய காஞ்சிபுரம், ஹஜரத் ஹமீத் அவுலியா தர்கா ஒட்டியுள்ள தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. 

பெரிய காஞ்சிபுரம், ஹஜரத் ஹமீத் அவுலியா தர்கா ஒட்டியுள்ள தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது.
பெரிய காஞ்சிபுரம், ஹஜரத் ஹமீத் அவுலியா தர்கா ஒட்டியுள்ள தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரத்திற்கு மேலாக, 'மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால், தர்காவிற்கு வருவோர் மட்டுமின்றி அவ்வழியாக பிற பகுதிக்கு செல்வோரும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. நாள் கணக்கில் வழிந்தோடும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்."

Tags

Next Story