இரத்த தானம் முகாம்

இரத்த தானம் முகாம்

ரத்த தான முகாம் 

சிவகாசியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இரத்த தானம் முகாமில் முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி பங்கேற்றார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருத்தங்கல், விஸ்வகர்மா ஐந்தொழிலாளர் திருமண மண்டபத்தில், அதிமுக கட்சி சார்பில் மாபெரும் ரத்த தானம் முகாம் நடைபெற்றது. ரத்த தான முகாமை, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடக்கி வைத்தார். சிவகாசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மேற்பார்வையில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.

இதில் அதிமுக கட்சியைச் சேர்ந்த 76 தொண்டர்கள் ரத்த தானம் வழங்கினர். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.முகாம் ஏற்பாடுகளை,திருத்தங்கல் நகர அதிமுக கட்சி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story