திருவண்ணாமலையில் ரத்த தான முகாம்!
![திருவண்ணாமலையில் ரத்த தான முகாம்! திருவண்ணாமலையில் ரத்த தான முகாம்!](https://king24x7.com/h-upload/2024/05/18/517082-1000019064.webp)
ரத்த தான முகாம்
திருவண்ணாமலை ஆர்ய வைஸ்ய இளைஞரணி சார்பில் இன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை கன்னி கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ வாசவி ஜெயந்தியை முன்னிட்டு திருவண்ணாமலை ஆர்ய வைஸ்ய இளைஞரணி சார்பில் இன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் இளைஞரணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 31 பேர் ரத்த தானம் வழங்கினர். இம்முகாமில் ஆரிய வைசிய சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story