கள்ளக்குறிச்சியில் ரத்ததான முகாம்

கள்ளக்குறிச்சியில் ரத்ததான முகாம்
ரத்ததான முகாம்
கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரி, ரோட்டரி சங்கம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரி, ரோட்டரி சங்கம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, தாளாளர் ரஹமத்துல்லா தலைமை தாங்கினார். ரோட்டரி கிளப் தலைவர் இமானுவேல் சசிகுமார், பொருளாளர் செல்வகுமார், முன்னாள் தலைவர் ராமலிங்கம், கல்லுாரி முதல்வர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.

நாட்டு நல பணி திட்ட அலுவலர் விஜயராஜ் வரவேற்றார். முகாமை செயலாளர் அல்லா பக் ஷ் துவக்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரத்ததானம் அளிப்பதன் அவசியம் குறித்து பேசினார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் விஜயகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கல்லுாரி மாணவர்கள் 50 பேரிடம் ரத்ததானம் பெற்றனர். துணை முதல்வர் பாஸ்கர் நன்றி கூறினார்.

Tags

Next Story