பாலிடெக்னிக் கல்லுாரியில் ரத்ததான முகாம்

பாலிடெக்னிக் கல்லுாரியில் ரத்ததான முகாம்

 பாலிடெக்னிக் கல்லுாரியில் ரத்ததான முகாம்

சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் இன்னர்வீல் கிளப் சார்பில் நடந்த ரத்ததானம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றதுடன் 30 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், இன்னர்வீல் கிளப் சார்பில் நடந்த முகாமிற்கு, இன்னர்வீல் கிளப் தலைவி கவுரி தலைமை தாங்கினார். கீதா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சேட்டு முகாமைத் தொடங்கி வைத்தார். ரத்ததானம் விழிப்புணர்வு குறித்து டாக்டர் சுகன்யா பேசினார். முகாமில், இன்னர்வீல் கிளப் உறுப்பினர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். 30 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.

Tags

Next Story