செந்திக்குமார் நாடார் கல்லூரியில் ரத்ததான முகாம்

செந்திக்குமார் நாடார் கல்லூரியில் ரத்ததான முகாம்
 ரத்ததான முகாம் 
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, விருதுநகர் விடியல் அரிமா சங்கம், விருதுநகர் தனசாமி - பரிமளாதேவி அறக்கட்டளை, மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியோர் இணைந்து இரத்த தான முகாம் நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கான வரவேற்புரையை வருகை இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜி. ரவி ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி பரிபாலன சபைத் தலைவர் வி.பழனிச்சாமி தலைமை தாங்கினார். கல்லூரிச் செயலாளர் எம்.டி.சர்ப்பராஜன் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் டி. பிரான்சிஸ் ரவி கலந்து கொண்டார். இம்முகாமில் இரத்த தானம் வழங்கிய மாணவர்களைக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.சாரதி வாழ்த்தி சான்றிதழ்களை வழங்கினார். இம்முகாமில் சுமார் 54 மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டு இரத்தத்தினைத் தானமாக வழங்கினர்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் முனைவர் ஆ.மோகன்ராஜ், ஏ.மாரீஸ்வரி, தேசிய மாணவர் படை மற்றும் நாட்டுத்தொண்டுத் திட்டம் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

Tags

Next Story