கள்ளக்குறிச்சியில் ரத்த தான முகாம்

கள்ளக்குறிச்சியில் ரத்த தான முகாம்

ரத்ததான முகாம்

கள்ளக்குறிச்சியில் நடைப்பெற்ற ரத்த தான முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் எஸ்.எஸ்., ஜெயின் சங்கம், ஜெயின் இளைஞரணி மற்றும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. முகாமிற்கு, ஜெயின் சங்கத் தலைவர் தேஜ்ராஜ் மனோகர் குமார் சுரானா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சஜ்ஜன்மல், ஹனுமந் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்தும், அதற்கான விதிமுறைகள் குறித்தும் பேசினார்.

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் விஜயகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சங்க நிர்வாகிகளிடமிருந்து ரத்தத்தை தானமாக பெற்றனர். முகாமில் 40 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட் டது. அப்போது, ஜெயின் இளைஞரணி நிர்வாகிகள் யோகேஷ், கோட்டாரி, ஆஷிஷ், விஷால், ராங்கா, அசோக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் விக்னேஸ்வரன், வசந்தன், பாலா கலந்து கொண்டனர்.

Tags

Next Story